search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு டாஸ்மாக் கடை"

    கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. #TasmacShop
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஜூஸ், இளநீர் குடித்து தங்களது தாகத்தை போக்கிக் கொள்கின்றனர்.

    ஆனால் குடிமகன்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க பீர்களை அதிக அளவு அருந்தி வருகின்றனர். இதனால் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை ரூ.29.30 கோடிக்கு 2.25 லட்சம் பீர் பாட்டில்களை குடித்து தீர்த்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் 106 டாஸ்மாக் கடைகளில் கடைகளுடன் இணைந்து பார்கள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் தினசரி 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்டிகை காலங்களில் மதுபானங்களின் விற்பனை 5 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 72 ஆயிரம் பீர் பெட்டிகள் ரூ.11.80 கோடிக்கும், பிப்ரவரி மாதத்தில் 85 ஆயிரம் பெட்டிகள் 13 கோடி ரூபாய்க்கும், மார்ச் மாதத்தில் இதுவரை 13 ஆயிரம் பெட்டிகள் ரூ.4.50 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

    ஒரு பெட்டியில் 12 பீர் பாட்டில்கள் இருக்கும். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை ரூ.29.30 கோடிக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது.

    கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் குடிமகன்கள் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளில் இருந்து பீர் வகைகளுக்கு மாறியுள்ளனர். இதனால் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏப்ரல், மே மாதங்களில் பீர்விற்பனை இதை விட கூடுதலாக விற்பனையாக வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் விற்பனை ரூ.20 கோடி ரூபாயை நெருங்க வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு வசூல் செய்வதாக குடிமகன்கள் புலம்பி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களில் இருந்து அதிக அளவில் பீர் ரகங்களுக்கு மாறி உள்ளோம். இதனால் பீர் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளுக்கு கூலீங் சார்ஜ் என்று கூறி 10 ரூபாயை அதிகமாக வசூல் செய்து வருகிறார்கள்.

    தற்போது கோடையையொட்டி பீர்வகைகள் அதிகமாக விற்பதால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள். இதன் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாயை வருமானம் பார்த்து வருகிறார்கள்.

    நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்களை எவ்வித விசாரணையும் இன்றி பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது குறையும் என்றனர். #TasmacShop
    ×